விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக இரண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப்
போராட்டங்கள் இடம்பெற்றதாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந் தேன்.
முதலாவது - புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் வைத்து மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.
இரண்டாவது - திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.
புலிகளின் வரலாற்றில் மூன்றாவதாகவும் ஒரு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருந் தது.
விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திரராஜா மாத்தையா அவர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
1993ம் ஆண்டு மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மாத்தையாவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் இந்தியா ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்தது.
ஆனால் மாத்தையா மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் இந்தியாவின் பங்கு வேறுவிதமாகவே இருந்தது.
புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்
உண்மையின் தரிசனம் பாகம் 23
தொகுப்பு: நிராஜ் டேவிட்
| அடுத்தது > |
|---|


