அமெரிக்க ஏவுகணைத் தாக்க்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தாலிபான் தலைவர் மசூதின் சகோதரர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மலைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் அங்கு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தான் தலிபான்களின் முன்னாள் தலைவர் பைதுல்லா மசூத்தின் சகோதரர் யாகூப் மசூத் கொல்லப்பட்டார்.
ஏவுகணை வீச்சில் தீவிரவாதிகள் பதுங் கியிருந்த வீடு தரைமட்டமானது. அங்கிருந்து மீட்கப்பட்ட பிணங்களில் இவரது உடலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
| அடுத்தது > |
|---|




