அமெரிக்காவுக்கு சென்ற சரக்கு விமானங்களில் வெடிகுண்டு பார்சல்களை அனுப்பியதாக கைது செய்யப்பட்ட
ஏமன் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு சரக்கு விமானங்களில் வெடிகுண்டுகளை அனுப்பியதாக ஏமன் நாட்டிலுள்ள சானா நகரைச் சேர்ந்த மாணவி ஹனான் அல் சமாவி என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு பார்சல்களை அனுப்பியது அவர் இல்லை என்பதும், அவரது அவரது அடையாள அட்டையை திருடி தீவிரவாதிகள் வெடிகுண்டு பார்சல்களை தீவிரவாதிகள் அனுப்பியதும் தெரியவந்தது.
இதனையடுத்த் அவர் விடுதலை செய்யப்பட்டதாக ஏமன் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| < முன் |
|---|




