இராணுவ நீதிமன்றத்தால் 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவ
தளபதியுமான சரத் பொன்சேகாவை விடுவிக்க கோரி திருகோணமலையில் இன்று ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
திருகோணமலை பஸ்நிலைய முன்றலில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் நீடித்தது.
ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது அக்கட்சியின் சேருவில அமைப்பாளர் வைத்தியகலாநிதி அனுர சிறிசேன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி வரதன், அருணாசலம், பரசுராமன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| < முன் | அடுத்தது > |
|---|




