யாழ். உரும்பிராய் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று இரவு 6.00 மணியளவில் கோப்பாய்ப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ் நீதவான் நீதிமன்றின் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவரான மேற்படி சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| < முன் | அடுத்தது > |
|---|




