பால் உற்பத்தியாளர் நுகர்வோர் சங்க கூட்டுறவு பணியாளர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையை முதலமைச்சர் கருணாநிதி வழங்கியுள்ளார்.
அதன்படி 200 நாட்களுக்கு மேல் பணியாற்றிவர்களுக்க ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
151 முதல் 200 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு 400 ரூபாயும், 91 முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்கள்க 240 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.
90 நாட்கள் குறைவாக பணியாற்றியவர்களுக்கு ஊக்கத் தொகையாக 145 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் பணியாளர்களுக்கும் பொங்கல் ஊக்கத்தொகை வழங்கி கருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் 6 ஆயிரத்து 352 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.63 லட்சத்து 52 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 19 ஆயிரம் பணியாளர்களுக்கு ரூ. 1 கோடியே 90 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது என்றும் அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| < முன் | அடுத்தது > |
|---|




